முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரம்: பறவைகள் கண்காட்சி திடலில் தீ விபத்து!

பறவைகள் கண்காட்சி திடலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக...

தற்போதைய செய்திகள்

ஆந்திரம்: பறவைகள் கண்காட்சி திடலில் தீ விபத்து!

பறவைகள் கண்காட்சி திடலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக...

Updated On : 12 பிப்ரவரி, 2025 at 10:03 AM
பகிர்:

விஜயவாடாவில் உள்ள சிதாரா மைய கண்காட்சி திடலில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சிதாரா மைய திடலில் பறவைகள் கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இக்கண்காட்சி திடலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அங்கிருந்த உள்ளுர் மக்கள் உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உடனியாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் முன்வைத்த 12 கேள்விகள்!

சமையல் எரிவாயு உருளை வெடித்ததால் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று காவல் துறையினர் முதல்கட்ட தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பறவைகளும், பெரிய அளவிலான நெருப்புக்கோழியும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →