ஆருத்ரா தரிசனம்: ஜன.13ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜன.12-ஆம் தேதி தேரோட்டமும், 13-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான கூடுவது வழக்கம். எனவே, அன்றைய நாள் அனைவரும் நடராஜரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | எஸ்பிஐ வங்கியில் பிரொபேஷனரி அதிகாரி வேலை: காலியிடங்கள் 600!
Advertisement
Advertisement
இதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 13 ஆம் தேதிக்குப் பதில் பிப்ரவரி 2 ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொங்கல் விடுமுறையும் சேர்ந்து வருவதால் கடலூர் மாவட்டத்து தொடர்ந்து 6 நாள்கள் விடுமுறை கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.