கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

இளம் தம்பதி சுட்டுக்கொலை! கொலையாளி தப்பியோட்டம்!

ராஜஸ்தானில் இளம் தம்பதி சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் தம்பதியை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார்.

ஜெய்பூரின் சங்கனெர் சதார் பகுதியிலுள்ள சாந்தி விகார் காலனியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 26), இவர் தனது மனைவி ஆஷா மீனா (25) மற்றும் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜன.24) காலை ஆஷாவின் தொழிற்சாலையில் பணிப்புரியும் மோனு என்பவர் அவர்களது வீட்டிற்கு ராஜாராம் மற்றும் ஆஷாவுடன் பேச வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு இருவரையும் மிகவும் நெருக்கத்திலிருந்து சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த தாக்குதலில் இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் பலி?

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி மகாத்மா காந்தி அர்சு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து, காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு, தப்பியோடிய கொலையாளி மோனுவை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்த கொலைச் சம்பவம் நடந்தபோது ராஜாராமின் சகோதரி அதே வீட்டில் அவர்களுடன் தான் இருந்தார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT