முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

தற்போதைய செய்திகள்

நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

Updated On : 25 ஜனவரி, 2025 at 3:47 AM
கோப்புப்படம்
பகிர்:

நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இன்று(ஜன. 25) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை தொடங்கியுள்ளது.

நேற்று தூத்துக்குடி விமான நிலையம், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் பின்னர் சோதனையில் அது புரளி என்பதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →