இந்தியாவில் ஆசிய, ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு அனுமதி?!
ஆசியக் கோப்பைக்காக இந்தியா வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணியைப் பற்றி...
இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டிக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வந்து விளையாடவிருப்பதை மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இது இருநாடுகளுக்கும் இடையில் தீவிரமான போராக மாறியதில் பாகிஸ்தான் தரப்பில் 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் எந்த உறவும், இரு நாடுகளுக்கு இடையிலான எந்தப் போட்டியில் விளையாடப் போவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவில் நடைபெறவுள்ளதாக தொடர்களில் விளையாட வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் மோதுவது ஒரு தடையாக இருக்காது எனக் கருதப்படுகிறது. ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு வந்து விளையாட எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.
ஆசியக் கோப்பைத் தொடர் பிகாரின் ராஜகிரில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூனியர் உலகக் கோப்பை தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை மற்றும் மதுரையில் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகள், நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
பல்வேறு சர்வதேச நாடுகள் விளையாடும் போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு தடைவிதிக்கமுடியாது. இந்தியாவுக்கு எதிரான நாடு பாகிஸ்தான் கிடையாது. இருதரப்பு போட்டிகள் வேறு; சர்வதேச தொடர்கள் வேறு என்றும் மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
The Pakistan hockey team will be allowed to compete in next month's Asia Cup in India, a source in the Sports Ministry said on Thursday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.