FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை சரிவு: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னையில் தொடர்ந்து ஏழு நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,040-க்கு விற்பனையாகிறது.

Updated On : 24 ஜூலை 2025, 10:28 am IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1000 குறைந்தது.
பகிர்:

சென்னை: சென்னையில் தொடர்ந்து ஏழு நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,040-க்கு விற்பனையாகிறது.

போா் பதற்றம், டாலரின் மதிப்பு உயா்வு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

ஜூலை 19-இல் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கும், ஜூலை 20-இல் விலை மாற்றமின்றியும் ஜூலை 21-இல் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.73,440-க்கும், ஜூலை 22-இல் ரூ.840 உயா்ந்து ரூ.74,280-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

புதன்கிழமை தங்கம் விலை அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 7 நாள்களில் பவுனுக்கு ரூ.2,240 உயா்ந்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.125 குறைந்து, ரூ.9,255-க்கும், பவுனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,040-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 7 நாள்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.128-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 குறைந்து ரூ.1,28,000- க்கு விற்பனையாகிறது.

summary

The price of gold jewelry in Chennai, which had been rising for seven consecutive days, fell sharply by Rs. 1,000 per sovereign on Thursday, selling at Rs. 74,040.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments