கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டில் நேர்ந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை...

DIN

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத் தீயானது வடக்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள உய்சோங் நகரத்தைச் சேர்ந்த மதிக்கத்தக்க நபர் ஒருவரால்தான் உண்டாகியிருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்ககின்றனர்.

இந்நிலையில், உய்சோங் நகரத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த மார்ச் 22 அன்று அங்குள்ள மலைக்குன்றின் மீதுள்ள அவரது குடும்பக் கல்லறையில் செய்த சடங்கின்போது பற்ற வைத்த நெருப்பினால் இந்தக் காட்டுத் தீயானது உண்டாகியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தென் கொரிய காவல் துறையினர் அந்நபரின் மகளிடம் முதற்கட்ட விசாரணையை தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் அவரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் தற்செய்லாக காட்டுத் தீ உண்டாக்குபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் 30 மில்லியன் வான் (20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) மதிப்பிலான பணம் அபராதமாக விதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

முன்னதாக, தென் கொரியாவில் நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றினால் தொடர்ந்து பரவிய இந்தக் காட்டுத் தீக்கு 24-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 37,000-க்கும் மேற்பட்டோர் இடமாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மியான்மர் நிலநடுக்கம்: இதுவரை 144 பேர் பலி, 730 பேர் காயம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT