காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தின் முதல் கூட்டம் பிப். 19-இல் வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமைதி வாரிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அல்லது அவர்களது சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், காஸா அமைதி வாரியத்தில் சேர டிரம்ப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தானும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறது. இதற்காக அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் பிப். 18-இல் அமெரிக்கா செல்வார் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுடன், எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, கத்தார், சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் ‘அமெரிக்க அமைதி மையத்தில்’ நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது, ‘காஸா மறுசீரமைப்பு’ பற்றியே முக்கியமாக விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.