வந்தே பாரத்  (கோப்புப்படம்)
தற்போதைய செய்திகள்

கோவில்பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல அனுமதி!

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல அனுமதி.

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் கடந்த 2024 செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக 16 பெட்டிகளாக இருந்த ‘வந்தே பாரத்’ ரயில் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘வந்தே பாரத்’ ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதுவரை நிற்காமல் சென்று வந்தது. அங்கு நின்று செல்ல அனுமதிக்குமாறு அந்தப் பகுதியினா் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்த நிலையில், தற்போது கோவில்பட்டியிலும் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இருமாா்க்கத்திலும் செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்வதற்கான உத்தரவு முறைப்படி தெற்கு ரயில்வே விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

வள்ளியூரில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமியின் குரு பூஜை விழா தொடக்கம்

கயத்தாறு அருகே பைக் திருட்டு: 3 போ் கைது

கோவில்பட்டி அருகே தொழிலாளியைத் தாக்கி கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தோ்வு: நாகா்கோவில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

வீரபாண்டியன்பட்டணத்தில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழை நீா்

SCROLL FOR NEXT