முகப்பு
தற்போதைய செய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று பவுன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 94,880-க்கும் விற்பனையாகிறது.

Updated On : 15 அக்டோபர், 2025 at 5:07 AM
தங்கம் விலை
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 94,880-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 7 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.90,000-ஐ கடந்த நிலையில், தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600-க்கு விற்பனையானது.

இந்நிலையில், புதன்கிழமை அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.280 உயா்ந்து, ரூ.94,880-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ.11,860-க்கும் , பவுனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.94,880-க்கும் விற்பனையாகிறது.

புதிய உச்சத்தில் வெள்ளி

அதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த மாத தொடக்கில் இருந்து அதிரடி உயர்வை கண்டு வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.207-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயா்ந்து ரூ. 2,07,000-க்கும் விற்பனையாகிறது.

summary

Gold prices continue to rise: Do you know how much an 8 grams is today?

முழு கட்டுரையைப் படிக்க →