முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Updated On : 25 அக்டோபர், 2025 at 10:53 AM
புதுச்சேரி பழைய துறைமுக பகுதியில் சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ள 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு...
பகிர்:

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் 27-ஆம் தேதி காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையும் என்றும் இந்த புயலுக்கு 'மோந்தா' என பெயரிடப்பட உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுப்பட்டுள்ளதால் மீனவர்கள் படகுகளை துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

summary

Cyclone warning mast number one hoisted at Puducherry and Karaikal ports

முழு கட்டுரையைப் படிக்க →