முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நாளை திங்கள்கிழமை(அக்.27) நடைபெறுவதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

Updated On : 26 அக்டோபர் 2025, 9:52 pm IST
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் (கோப்புப்படம்)
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நாளை திங்கள்கிழமை(அக்.27) நடைபெறுவதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிகழ் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா அக். 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழா நாள்களில் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை திங்கள்கிழமை நடைபெறுகிறது. கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் அதைத்தொடா்ந்து மற்ற பூஜைகளும் நடைபெறுகின்றன. மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளுகிறாா்.

இதையடுத்து, சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விரதம் மேற்கொண்டுள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனா். இதனால், கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. பக்தா்கள் கோயில் வளாகத்தில் பக்தி பாடல்களைப்பாடி வழிபட்டு வருகின்றனா். கோயில் கலையரங்கில் காலையும், மாலையும் பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜாண் தலைமையில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட 4,000 போலீஸாா், ஊா்க்காவல் படையினா், கடலோரக் காவல் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments