முல்லைப் பெரியாறு அணையில் துணை மேற்பார்வை குழு ஆய்வு!
முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் 5 பேர் கொண்ட துணை மேற்போர்வை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில் 5 பேர் கொண்ட துணை மேற்பார்வை குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
பெரியாறு வைகை படுகை வட்ட மேற்பார்வை பொறியாளர் சாம் இர்பின், கம்பம் கோட்டம் முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளர் செல்வம் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவினர் முல்லைப் பெரியாறு அணைக்கு தேக்கடி படகுத் துறையில் இருந்து படகு மூலமாக அணைக்கு சென்றனர்.
தொடர்ந்து பிரதான அணை, பேபி அணை, வல்லக்கடவு சாலை சீரமைத்தல், அணைக்கு நீர்வரத்து, அணையின் நீர்மட்டம் உள்ளிட்ட 13 பராமரிப்பு பணிகளை குறித்து தொடர்ந்து மேற்பார்வை செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வில் கேரளத்தை சேர்ந்த இடுக்கி கட்டப்பனை நீர் பாசனத்துறை லிவின்ஸ் கோட்டார், துணை கோட்ட பொறியாளர் ஜித் ஆகியோர் கொண்டனர்.
A five-member sub-committee of the National Dam Safety Authority inspected the Mullaperiyar Dam on Thursday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.