முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த துணை மேற்போர்வை குழுவினா்  
தற்போதைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் துணை மேற்பார்வை குழு ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் 5 பேர் கொண்ட துணை மேற்போர்வை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில் 5 பேர் கொண்ட துணை மேற்பார்வை குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

பெரியாறு வைகை படுகை வட்ட மேற்பார்வை பொறியாளர் சாம் இர்பின், கம்பம் கோட்டம் முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளர் செல்வம் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவினர் முல்லைப் பெரியாறு அணைக்கு தேக்கடி படகுத் துறையில் இருந்து படகு மூலமாக அணைக்கு சென்றனர்.

முல்லைப் பெரியாறு அணைக்கு தேக்கடி படகுத் துறையில் இருந்து படகு மூலமாக அணைக்கு சென்ற துணை மேற்பார்வை குழுவினர்.

தொடர்ந்து பிரதான அணை, பேபி அணை, வல்லக்கடவு சாலை சீரமைத்தல், அணைக்கு நீர்வரத்து, அணையின் நீர்மட்டம் உள்ளிட்ட 13 பராமரிப்பு பணிகளை குறித்து தொடர்ந்து மேற்பார்வை செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் கேரளத்தை சேர்ந்த இடுக்கி கட்டப்பனை நீர் பாசனத்துறை லிவின்ஸ் கோட்டார், துணை கோட்ட பொறியாளர் ஜித் ஆகியோர் கொண்டனர்.

A five-member sub-committee of the National Dam Safety Authority inspected the Mullaperiyar Dam on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே!

சார்லி கிர்க்கைக் கொன்றவர் யார்? இன்னும் துப்பு துலங்கவில்லை!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT