மேற்கு வங்கம்: 7 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம்!
மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பற்றி...
மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப். 2 தொடங்கி ஏப். 9 வரை நடைபெறுகிறது. ஏப். 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப். 13 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.
Advertisement
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
கடந்த முறை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில் இம்முறை தனித்துப் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 7 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளில் புதிய வேட்பாளர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நாகஷிபரா - தாஹிர் எஸ்கே
சாப்ரா - ஆசிப் கான்
மினாகான் - சுனயனா பிஸ்வாஸ்
மந்திர்பஜார் - சந்த் சர்தார்
ரெய்னா - பம்பா மாலிக்
கேதுகிராமம் - அபு பக்கர்
ஆஸ்கிராம் - தபஸ் பரல்
ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் ஹப்ரா தொகுதியில் பிரணாப் பட்டாச்சார்யா போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜி, சுவேந்து அதிகாரி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.