அழகே அழகு

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க...

தினமணி

பெண்கள் பலருக்கும் முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும். இதனை அகற்ற வேதியியல் சிகிச்சை முறைகளை நோக்கி பயணிப்பதும் அதிகரித்துக் காணப்படுகிறது. 

ஆனால், எந்தவித பக்கவிளைவும் இன்றி இயற்கையான முறையில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கலாம். 

ஒரு டீஸ்பூன் கடலை மாவு எடுத்து அதனை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து ஒரு 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும். 

முகத்தில் மட்டுமின்றி கைகளில், அக்குள் பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கவும் இந்த பேஸ்டை பயன்படுத்தலாம். 

அழகுப் பொருள்களில் குறிப்பிடத்தக்க ஒன்று கடலை மாவு. சோப்பு, ஷாம்பூ என செயற்கை ரசாயனங்கள் வருவதற்கு முன்னதாக முன்னோர்கள் குளிப்பதற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தினர்.

எனவே முடியை அகற்ற லேசர் சிகிச்சைகளுக்கு பதிலாக இந்த இயற்கை முறையை முயற்சியுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT