அதிமுக பொதுச் செயலராக கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களால் ஒருமித்த உணர்வுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே. சசிகலா இன்று ராயப்பேட்டை, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலியில் அமர்ந்து பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தலைமை அலுவலக வளாகத்தில் இருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கும் ஜெயலலிதா உருவப்படத்துக்கும் மாலையிட்டு மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பேற்றுக் கொள்ளும் போது சசிகலாவின் தோற்றம்;
ஜெ போலவே பச்சை நிறப் புடவை!
ஜெ போலவே வட்டப் பொட்டில் ஐயங்கார் திருச்சூர்ணம்!
ஜெ போலவே ஏற்ற இறக்கமான அமர்த்தலான பேச்சு
நேற்று வரை இருந்த ஹேர் ஸ்டைல் இன்று காணோம். அதுவும் ஜெ வழியில் கிளிப் போடப்பட்ட சிறு கொண்டையுடன் அசத்தலாக ஜெ வை நகலெடுத்தவராக இருக்கிறார் சசி!
சசிகலாவின் கண்ணீர் மல்கும் கன்னிப் பேச்சிலிருந்து சில பகுதிகள் இங்கே...
என்பதாக இருந்தது திருமதி. சசிகலாவின் பேச்சு.
கடந்த 33 ஆண்டுகளாக அவர் ஜெ வுடன் இருந்தாலும். முதல்முறையாக இப்போது தான் பொது வாழ்வில் நேரடியாக கட்சியினர் முன்பாக ஒரு உரையை நிகழ்த்தி இருக்கிறார். மிக உருக்கமாகவும், கண்ணீர் மல்கும் விதமாகவும் இருந்த இந்த உரையளவில் தமிழக அரசியலில் தனக்கான இடத்தை வெகு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
வெகுஜனங்களைப் பொருத்தவரை மக்கள் நல நடவடிக்கையாக இவர் முன்னெடுக்கும் பிரச்சினைகளைப் பொறுத்து தான் இவருக்கான இடம் உறுதி செய்யப்படும். அதற்கான உத்திரவாதம் வெறும் பேச்சளவில் இருந்தால் போதாது. இதை அவரும் வெகு நன்றாகவே அறிந்திருக்கக் கூடும். என்ன செய்யவிருக்கிறார் சசிகலா? அடுத்து வரும் நாட்களில் காண முடியலாம். அதுவரை ஜெவின் நகலாக இருக்க முற்படும் முயற்சியாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.