செய்திகள்

அழித்தொழிக்கப்பட்ட 12 குவிண்டால் கார்பைடு மாம்பழங்கள்! தமிழகத்தில் இது சாத்தியமா?

விற்பனைக்கு வைத்த வியாபாரிகளே கைப்பற்றப்பட்ட மாம்பழங்களை உணவு ஆய்வாளர்கள் முன்னிலையில் முற்றிலுமாக அழித்தனர். அழித்தொழிக்கப் பட்ட மாம்பழங்களின் மொத்த மதிப்பு 62,000 ரூபாய்.

PTI

கெளகாத்தியில் மே 26: கெளகாத்தியில் மே 26 அன்று 12 குவிண்டால் மாம்பழங்கள் அழித்தொழிப்பு. உணவுக் ஆய்வாளர்களால் கார்பைடு ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் எனக் கண்டறியப்பட்ட சுமார் 12 குவிண்டால் மாம்பழங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் அழித்தொழிக்கப் பட்டன. கெளகாத்தியின் காமரூப் மெட்ரோபொலிட்டன் மாவட்டத்திலுள்ள ஃபேன்ஸி பஜார் எனும் காய்கறி மற்றும் பழச்சந்தையில் உணவு ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்ட போது அங்கே மொத்தம் 12.5 குவிண்டால் மாம்பழங்கள் கார்பைடு ரசாயனக் கல் கொண்டு பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

வடகிழக்கு மாநிலங்களின் மிகப்பெரிய விற்பனைச் சந்தையாகக் கருதப்படும் இவ்விடத்தில் கண்டறியப்பட்ட இந்த மாம்பழங்கள் பொதுமக்களைச் சென்றடையும் முன் அழிக்கப்பட வேண்டும் என உணவு ஆய்வாளர்கள் குழு உத்தரவிட்டது. அதையடுத்து, மாம்பழங்களை விற்பனைக்கு வைத்த வியாபாரிகளே கைப்பற்றப்பட்ட மாம்பழங்களை உணவு ஆய்வாளர்கள் முன்னிலையில் முற்றிலுமாக அழித்தனர். அழித்தொழிக்கப் பட்ட மாம்பழங்களின் மொத்த மதிப்பு 62,000 ரூபாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT