'மன்னர் ஏன் மார்கழியில் போரை வைத்துக் கொள்ளலாம் என்கிறார்?'
'அப்போதுதான் எதிரிகள் மன்னரைப் பார்த்து நடுங்குவார்களாம்.
- உ.சபாநாயகம், சிதம்பரம்.
**
'எங்களுக்கு பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு. கல்யாணத்துக்கு பொண்ணுக்கு என்ன போடுவீங்க?'
'கை, காலுக்கு மருதாணி, நகத்துக்கு நகபாலீஷ், தலைமுடிக்கு ஹேர் கலர் ஷாம்பு, உதட்டுக்கு லிப்ஸ்டிக் இவ்வளவும் போடுவோம்'
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
'அந்த பெரியவர் சரியான சாப்பாட்டு பிரியர்னு எதை வச்சு சொல்றீங்க?'
'பல் போனால் பக்கோடா போகும்னு புதுமொழி சொல்லிட்டுப் போறாரே'
- கே.முத்தூஸ், தொண்டி.
பக்கத்து வீட்டுக்காரர்: நாளையிலிருந்து உனக்கும், உன் வீட்டம்மாவுக்கும் சண்டை வரப்போகுது?
இவர்: ஏன் அப்படி சொல்றீங்க?
பக்கத்து வீட்டுக்காரர்: என் மனைவிக்கு புதுசா ஒரு வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்திருக்கேனே
- கே.ஈ.கே, விழுப்புரம்.
அப்பா ... இன்னிக்குதான் எங்க சார் உங்கள பாராட்டினாங்க'
எதுக்குடா...?'
ஹோம் ஒர்க் சரியா இருந்துச்சாம்'
- ம.வேதவள்ளி, பொரவச்சேரி.
அப்பா : எதுக்கு சார் என் பையனை அடிச்சீங்க?
ஆசிரியர்: ஏன்டா ஹோம் ஒர்க் பண்ணலன்னு கேட்டா,
நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறேன் சார்ன்னு சொல்றான் சார்
- கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.