முகப்பு
செய்திகள்

தற்கொலைக்கான காரணிகள் இளம்பருவத்தினரில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வு

தற்கொலை அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் இளம்பருவத்தினரில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்க பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
கோப்புப்படம்
பகிர்:

தற்கொலை அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் இளம்பருவத்தினரில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்கப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

குழந்தை மற்றும் இளம்பருவத்தினரின் மனநலம் தொடர்பான இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது;

இளம் பருவத்தினரின் தற்கொலை நடத்தை தொடர்பான சில ஆபத்து காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேநேரத்தில் தற்கொலை வாய்ப்பைக் குறைக்கக்கூடிய சில பாதுகாப்பு காரணிகளையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

முந்தைய 66 ஆய்வுகளின் முடிவுகளை கருத்தில் கொண்டு, இந்த ஆய்வில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 

தனிப்பட்ட முறையில் சூழ்நிலையை சமாளித்தல், ஸ்மார்ட்போன் துஷ்பிரயோகம், ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு, மாதவிடாய் பிரச்சினைகள், மோசமான வாழ்க்கை முறை மற்றும் தொந்தரவு தூக்க முறைகள் ஆகியவை உள் ஆபத்து காரணிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. 

வெளிப்புற ஆபத்து காரணிகளாக பெற்றோரின் மனநலம், குடும்பத்தில் மோசமான தொடர்புகள் மற்றும் சமூக பிரச்னைகள் உள்ளிட்டவை கூறப்பட்டுள்ளன. 

ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை மறுபரிசீலனை செய்து வாழ்வது, போதுமான ஊட்டச்சத்து, பெற்றோர் - குழந்தை உரையாடல், புத்தகங்களைப் படிப்பது திரைப்படங்களைப் பார்ப்பது, நம்பிக்கை அல்லது மதவாதம் ஆகியவை இளம் பருவத்தினரின் தற்கொலை நடத்தை அபாயத்தைக் குறைக்கும் பாதுகாப்பு காரணிகளாகும்.

'மற்றவர்களை நேசிப்பது கட்டாயம், அதே நேரத்தில் உங்களை நேசிப்பது தைரியம். நீங்கள் முதலில் உங்களை நேசியுங்கள். உங்களை நேசிக்க ஒருபோதும் பயப்பட வேண்டாம். மற்றவர்களுக்காக போராடுவதற்கு முன்பு உங்களுக்காக நீங்கள் போராட வேண்டும்' என இந்தோனேசியாவின் யுனிவர்சிட்டாஸ் பிராவிஜயாவின் மூத்த எழுத்தாளர் ஹெனி டி. விண்டர்வதி கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →