செய்திகள்

தனிநபர் கடன் கோரும் முன் 5 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!

வங்கியில் கடன் பெறுவது என்ன அவ்வளவு பெரிய தவறா என்றால்.. தவறு இல்லை.. தவறாகிவிடக் கூடாது என்பதே பொதுவான கருத்து.

DIN


வங்கியில் கடன் பெறுவது என்ன அவ்வளவு பெரிய தவறா என்றால்.. தவறு இல்லை.. தவறாகிவிடக் கூடாது என்பதே பொதுவான கருத்து.

சார்.. உங்களுக்கு பர்சனல் லோன் கிடைத்திருக்கிறது என்று வங்கியிலிருந்து வரும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்புக்காக கடன் எடுத்தவர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்.

அவர்களை எல்லாம் இதில் சேர்க்க முடியாது.. ஆனால் அவசியத் தேவைக்காக ஒரு வங்கியில் தனிநபர் கடன் கோரும் முன்பு நீங்கள் உங்களையே ஒரு 5 கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதற்கு சரியான பதில் கிடைத்த பிறகு வங்கியை நாடுகள் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

சரி.. ஒரு அவசிய அல்லது தேவைக்காக தனிநபர் கடன் பெற திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால்.. இந்த ஐந்து கேள்விகளை எதிர்கொள்ளுங்கள்.

1. கிரெடிட் ஸ்கோர் எப்படி இருக்கிறது?
ஒருவருக்கு வங்கியில் கடன் கிடைக்க வேண்டும் என்றால் முதல் அடிப்படை கிரெடிட் ஸ்கோர் எப்படி இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். உங்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கியவர்கள் உங்களுக்கு அளித்திருக்கும் மதிப்பெண்ணின் மூன்று இலக்கக் கூட்டுத் தொகையே கிரெடிட் ஸ்கோர். நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களுக்கு விரைவாக குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இல்லையெனில் அது இதுவென கட்டணங்களை வசூலித்த நல்ல வட்டியில் கடனை உங்கள் தலையில் கட்டிவிடும் நிதிநிறுவனங்கள். எனவே முதலில் இதனை ஆராயுங்கள்.

2. அவசியம் கடன் வேண்டுமா?
ஒரு தனிநபர் கடனை கோரும் முன் அது அவசியமா? தள்ளிப்போட முடியுமா? மாற்று வழிகள் இருக்கின்றதா? உங்களால் சேமித்து அந்தத் தொகையை கடன் இல்லாமல் செலவிட முடியுமா? நண்பர்கள், உறவினர்களிடம் கேட்டுப் பெற்று திரும்ப செலுத்தும் வழிமுறை இருக்கிறதா?  உங்களிடம் இருக்கும் சேமிப்பிலிருந்து எடுக்க இயலுமா போன்ற வழிமுறைகளை ஆராயலாம்.

3. எவ்வளவு வேண்டும்?
ஒரு குறிப்பிட்டத் தொகையை கோரும் போது, அது சரியான தொகைதானா? அதனைக் குறைக்க முடியுமா? என ஆராயுங்கள். ஒரு குறிப்பிட்ட தொகை குறைந்தாலும் வட்டியும் மாதத் தவணைக் காலமும் குறையலாம்.

4. எவ்வளவு சீக்கிரம் திரும்ப செலுத்துவீர்கள்?
எவ்வளவு மாதத் தவணையில் அதனை திரும்ப செலுத்த முடியும். மிகக் குறைந்த தவணையில் செலுத்துவதென்றால் அதற்கான வழிமுறைகள் உங்களிடம் இருக்கிறதா? வட்டியுடன் எவ்வளவு கடன் தொகை மாதந்தோறும் கழிக்கப்படுகிறது என்ற தகவல்களையும் சேகரித்து இதனை அலசுங்கள்.
5. நிச்சயம் திரும்ப செலுத்த முடியுமா?
மாதச் செலவு, இதர கட்டணங்கள் எல்லாவற்றையும் செலுத்திவிட்டு, இந்த மாதத் தவணையையும் செலுத்த முடியுமா? இதனால் உங்களின் மாதச் செலவுக் கணக்கில் துண்டு விழுமா என்பதையும் ஒரு முறைக்கு இரு முறை கணக்கிட்டுவிட்டு வங்கியை நாடலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தக்காளி ஒரு கிலோ ரூ.100

பிகாரில் இண்டி கூட்டணித் தலைவா்களுடன் ராகுல் காந்தி வாக்குரிமைப் பேரணி: ஆக. 17-இல் தொடங்குகிறாா்

தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்பு

போரை நிறுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவு!

தெற்கு ரயில்வேயில் ஓராண்டில் 1.69 லட்சம் புகாா்களுக்கு தீா்வு

SCROLL FOR NEXT