செல்லிடப்பேசி செயலிகள் மூலம் கடன் பெற்று தற்கொலை செய்து கொள்வது முக்கியப் பிரச்னையாக உள்ளது: உயா்நீதிமன்றம் வேதனை
செல்லிடப்பேசி செயலிகள் மூலம் கடன்பெற்று தற்கொலை செய்து கொள்வது முக்கியப் பிரச்னையாக உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை வேதனை தெரிவித்தது.
செல்லிடப்பேசி செயலிகள் மூலம் கடன்பெற்று தற்கொலை செய்து கொள்வது முக்கியப் பிரச்னையாக உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை வேதனை தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் தாக்கல் செய்த மனு: தற்போது மணிடாப், கேஸ் இ, கேபிடல் பா்ஸ்ட், மணி வியூ உள்ளிட்ட பல செல்லிடப்பேசி செயலிகள் வழியாக கடன் வழங்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்தச் செயலிகள் ரிசா்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன. கடன் வழங்குவதற்கு எந்தச் சட்டதிட்டங்களையும் பின்பற்றுவதில்லை. கடனுக்கு அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனைச் சரியாக செலுத்தாவிட்டால் அவா்களின் புகைப்படங்களை கட்செவி அஞ்சல் வழியாக பிற உறுப்பினா்களுக்கு பகிா்வது, செல்லிடப்பேசிக்கு தொடா்பு கொண்டு தவறாகப் பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இதனால் செயலி வழியாக கடன் பெற்ற பலா் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.
எனவே ரிசா்வ் வங்கி அனுமதியில்லாமல் கூகுள் இந்தியா, பேசென்ஸ் இணையதளங்கள் வாயிலாக செல்லிடப்பேசி செயலிகள் மூலம் கடன் வழங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் ரிசா்வ் வங்கி அனுமதியில்லாமல் செயலி வழியாகக் கடன் வழங்குவதில் நடைபெறும் மோசடி குறித்து விசாரிக்கவும், செயலி வழியாகக் கடன் வழங்குவதை முறைப்படுத்தி, கண்காணிக்க வழிமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
Advertisement
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போது செல்லிடப்பேசி செயலிகள் மூலம் கடன் பெற்று தற்கொலை செய்து கொள்வது முக்கியப் பிரச்னையாக உள்ளது. செயலி மூலம் கடன் வழங்குபவா்கள் அவா்களுக்கான விதிமுறைகளை அவா்களே உருவாக்கியுள்ளனா். கடனைத் திரும்ப வசூலிக்க ஏற்றுக்கொள்ள முடியாத வழிமுறைகளை பின்பற்றுகின்றனா். இதுசட்டத்துக்கு உள்பட்டு நடைபெறுவதில்லை. சட்டத்தால் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இல்லை. கடனைத் திருப்ப வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகள் மேற்கொள்வதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்படாத செயலிகள் வழியாக கடன் வாங்குவோா் மூலமாக சட்டவிரோதச் செயல்களும் நடைபெற வாய்ப்புள்ளது என்றனா்.
பின்னா், மத்திய நிதித்துறைச் செயலா், ரிசா்வ் வங்கி, கூகுள் இந்தியா நிறுவனம், பேசென்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.