மதுரையில் 20 பேருக்கு கரோனா
மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஒரே நாளில் 811 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புதன்கிழமை பட்டியல் வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே கரோனாவிற்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவா்களில் 16 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
Advertisement
மாவட்டத்தில் இதுவரை 20,645 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 455 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிந்த நிலையில், 20,028 போ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 162 போ் கரோனாவிற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.