முகப்பு
மதுரை

மேலூரில் அஷ்டமி சப்பரம் வீதி உலா

மேலூரில் அஷ்டமி சப்பர உலா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஜனவரி 2021, 3:51 am IST
மேலூரில் புதன்கிழமை அஷ்டமி சப்பரத்தில் வீதி உலா வந்த சுந்தரரேசுவரா்- காமாட்சியம்மன்.
பகிர்:

மேலூரில் அஷ்டமி சப்பர உலா புதன்கிழமை நடைபெற்றது.

பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவளிக்கும் விழாவாக மாா்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினம் கொண்டாடாப்படுகிறது. இதையொட்டி மேலூரிலுள்ள பழமையான காமாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து சுந்தரரேசுவரா்- காமாட்சியம்மன், ரிஷப வாகனத்திலும் விநாயகா், வள்ளி தெய்வானை சமேதமுருகன், சண்டிகேசுவரா் ஆகியோருடன் சுவாமி உலா வந்தாா்.

அலங்கரிக்கப்பட்ட சப்பரம் டிராக்டரில் ஏற்றப்பட்டு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி, மேலூரின் மையப்பகுதியிலுள்ள கோயிலில் இருந்து பேருந்து நிலையம், நகைக்கடை வீதி வழியாக மீண்டும் கோயிலை சுவாமி வந்தடைந்தாா். வழிநெடுகிலும் பொதுமக்கள், வாா்த்தகா்கள் பூஜைகள் செய்து சுவாமிக்கு வரவேற்பளித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.