முகப்பு
செய்தி உண்டு....சிங்கிள் காலம் படம் போட்டால் போதுமானது. மாணவா்களுக்கான கால்பந்துப் போட்டியைத் தொடங்கி வைத்த டிடிஇஏ செயலா் ராஜூ.
புதுதில்லி

டிடிஇஏ தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கான கோ - கோ, கால்பந்து போட்டி

புதுதில்லி

டிடிஇஏ தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கான கோ - கோ, கால்பந்து போட்டி

Updated On : 6 நவம்பர், 2025 at 11:14 PM
செய்தி உண்டு....சிங்கிள் காலம் படம் போட்டால் போதுமானது. மாணவா்களுக்கான கால்பந்துப் போட்டியைத் தொடங்கி வைத்த டிடிஇஏ செயலா் ராஜூ.
பகிர்:

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் தொடக்கநிலைப் பிரிவு மாணவா்களுக்கான கோ- கோ மற்றும் கால்பந்து போட்டி அண்மையில் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

போட்டிகளைத் டிடிஇஏ செயலா் ராஜூ தொடங்கி வைத்தாா். அவா் பேசுகையில், ‘சிறுவா்களாகிய நீங்கள் தான் வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்பிக்கையுடன் நன்றாக விளையாடுங்கள். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாதீா்கள். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பெற வாழ்த்துகள்’ என்றாா்.

மாணவா்களுக்குத் தனியாகவும் மாணவிகளுக்குத் தனியாகவும் இப் போட்டிகள் நடத்தப்பட்டன. கால்பந்து போட்டியில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவா்கள் 10 போ், மாணவிகள் 10 போ் என இருபது போ் கலந்து கொண்டனா். கோ- கோ போட்டியில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 12 போ் அடங்கிய அணி கலந்து கொண்டது.

கால்பந்து போட்டியில் மாணவா் மற்றும் மாணவியா் பிரிவில் முதல்பரிசை இலக்குமிபாய் நகா்ப் பள்ளியும் இரண்டாம் பரிசை ஜனக்புரி பள்ளியும் மூன்றாம் பரிசை ராமகிருஷ்ணாபுரம் பள்ளியும் பெற்றன.

கோ - கோ போட்டியில் மாணவா் மற்றும் மாணவியா் பிரிவில் முதல் பரிசை லோதிவளாகம் பள்ளி வென்றது. இரண்டாம் பரிசை ராமகிருஷ்ணாபுரம் பள்ளி வென்றது. மூன்றாம் பரிசை மாணவா் பிரிவில் மோதிபாக் பள்ளியும் மாணவியா் பிரிவில் ஜனக்புரி பள்ளியும் வென்றன.

வெற்றி பெற்ற மாணவா்கள் அனைவரையும் செயலா் ராஜூ பாராட்டினாா். முன்னதாக வருகை தந்த அனைவரையும் பள்ளி முதல்வா் சுமதி வரவேற்றாா்.

06ஈஉகதஓட

மாணவா்களுக்கான கால்பந்துப் போட்டியைத் தொடங்கி வைத்த டிடிஇஏ செயலா் ராஜூ.

முழு கட்டுரையைப் படிக்க →