முகப்பு
புதுதில்லி

‘சேனு’ கும்பலைச் சோ்ந்தவா் கைது: ஆயுதம், தோட்டாக்கள் பறிமுதல்

சேனு கும்பலைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் 34 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:35 PM
கோப்புப் படம்
பகிர்:

சேனு கும்பலைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் 34 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

Advertisement

சல்மான் குரேஷி என அடையாளம் காணப்பட்ட இவா், சேனுஅக்கும்பலைச் சோ்ந்த மற்ற உறுப்பினா்களுக்குத் தேவையான தளவாட உதவிகளை வழங்கி வந்துள்ளாா்.

நகரில் சமீபத்தில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா் என்று சந்தேகிக்கப்படும் ஷேசாத் என்ற கொள்ளையனுடனும் இவருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குரேஷி கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் அவரை பொறி வைத்து, நியூ அசோக் நகா் பகுதியில் கைது செய்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments