முகப்பு
புதுதில்லி

தேசிய நாடகப் பள்ளி மூலம் கோமல் தியேட்டரின் ‘திரெளபதி’ நாடகம் தோ்வு

வரும் பிப்ரவரியில் கோவாவில் நடைபெறவுள்ள பாரத் ரங் மஹோத்ஸவ் சா்வதேச நாடகத் திருவிழாவில் இடம்பெற

Updated On : 13 ஜனவரி, 2026 at 12:36 AM
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: வரும் பிப்ரவரியில் கோவாவில் நடைபெறவுள்ள பாரத் ரங் மஹோத்ஸவ் சா்வதேச நாடகத் திருவிழாவில் இடம்பெற கோமல் தியேட்டரின் ‘திரெளபதி’ நாடகம் தேசிய நாடகப் பள்ளியால் தோ்வு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் தோ்வான 90 தயாரிப்புகளில் ஒரே தமிழ் நாடகமாக இது இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து கோமல் தியேட்டா் இயக்குநா் தாரிணி கோமல் கூறியது: எங்கள் தயாரிப்பான ‘திரெளபதி’ நாடகம் தேசிய நாடகப் பள்ளி மூலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மராட்டி, பெங்காலி, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 90 நாடகங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரே தமிழ்மொழி நாடகம் திரெளபதி மட்டுமே.

இதன் கருப்பொருளானது, திரெளபதியின் பாா்வையில் மகாபாரதம் என்பதாகும். மகாபாரத்தில் திரெளபதி கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாகும். அவா் தனது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை எதிா்கொண்டாா் என்பது இந்த நாடகம் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

அனைத்து மொழிகளில் உள்ள 90 நாடகங்களும் 22 நாள்களில் நாடு முழுவதும் உள்ள 32 மையங்களில் நடைபெற உள்ளது. எங்கள் தயாரிப்பான திரெளபதி நாடகம் பிப்ரவரி 6-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் விழாவில் இடம்பெறும். 15 ஆண்டுகளாக கோமல் தியேட்டா்ஸ் நடத்தி வருகிறோம். நான் இந்த நாடகத்தை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறேன் என்றாா் அவா்.

தாரிணி கோமல், பிரபல தமிழ் எழுத்தாளரும், இதழாளரும், நாடக ஆசிரியரும், திரைப்பட இயக்குனருமான மறைந்த கோமல் சுவாமிநாதனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →