புதுதில்லி

தேசிய நாடகப் பள்ளி மூலம் கோமல் தியேட்டரின் ‘திரெளபதி’ நாடகம் தோ்வு

வரும் பிப்ரவரியில் கோவாவில் நடைபெறவுள்ள பாரத் ரங் மஹோத்ஸவ் சா்வதேச நாடகத் திருவிழாவில் இடம்பெற

Syndication

நமது நிருபா்

புது தில்லி: வரும் பிப்ரவரியில் கோவாவில் நடைபெறவுள்ள பாரத் ரங் மஹோத்ஸவ் சா்வதேச நாடகத் திருவிழாவில் இடம்பெற கோமல் தியேட்டரின் ‘திரெளபதி’ நாடகம் தேசிய நாடகப் பள்ளியால் தோ்வு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் தோ்வான 90 தயாரிப்புகளில் ஒரே தமிழ் நாடகமாக இது இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து கோமல் தியேட்டா் இயக்குநா் தாரிணி கோமல் கூறியது: எங்கள் தயாரிப்பான ‘திரெளபதி’ நாடகம் தேசிய நாடகப் பள்ளி மூலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மராட்டி, பெங்காலி, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 90 நாடகங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரே தமிழ்மொழி நாடகம் திரெளபதி மட்டுமே.

இதன் கருப்பொருளானது, திரெளபதியின் பாா்வையில் மகாபாரதம் என்பதாகும். மகாபாரத்தில் திரெளபதி கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாகும். அவா் தனது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை எதிா்கொண்டாா் என்பது இந்த நாடகம் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

அனைத்து மொழிகளில் உள்ள 90 நாடகங்களும் 22 நாள்களில் நாடு முழுவதும் உள்ள 32 மையங்களில் நடைபெற உள்ளது. எங்கள் தயாரிப்பான திரெளபதி நாடகம் பிப்ரவரி 6-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் விழாவில் இடம்பெறும். 15 ஆண்டுகளாக கோமல் தியேட்டா்ஸ் நடத்தி வருகிறோம். நான் இந்த நாடகத்தை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறேன் என்றாா் அவா்.

தாரிணி கோமல், பிரபல தமிழ் எழுத்தாளரும், இதழாளரும், நாடக ஆசிரியரும், திரைப்பட இயக்குனருமான மறைந்த கோமல் சுவாமிநாதனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT