முகப்பு
நூல் அரங்கம்

கோடரிக் காம்பில் பூக்கள்

கோடரிக் காம்பில் பூக்கள்; சுமதிஸ்ரீ; பக்.104; ரூ.50; வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், சென்னை}17. )044-24314347. படைப்புகள் எனப்படுபவை வெறும் எழுத்துகளின் கூட்டமாக இருக்கக்கூடாது. வாழ்ந்து கொண்டிருக்கும்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:08 AM
பகிர்:

கோடரிக் காம்பில் பூக்கள்; சுமதிஸ்ரீ; பக்.104; ரூ.50; வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், சென்னை}17. )044-24314347.

படைப்புகள் எனப்படுபவை வெறும் எழுத்துகளின் கூட்டமாக இருக்கக்கூடாது. வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும் என்னும் கருத்தை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பதினைந்து சிறுகதைகளும் உறுதி செய்கின்றன. தன் கணவனைக் கொன்றுவிட்டு, சிறைக்குப் போனவனின் குழந்தையையும் தன்னுடைய குழந்தைக்கு நிகராக சீராட்டி வளர்க்கும் ஒரு பெண்ணின் மேன்மையைச் சொல்லும் "கோடரிக்காம்பில் பூக்கள்' சிறுகதை, ஜாதிக் கொடுமையையும், அரசியல்வாதிகளின் போலி வேடத்தையும் தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது. "நரிக்குறத்தி', "சில தலைமுறைகளின் கதை' போன்ற சிறுகதைகளில், சில சமூகங்களைச் சேர்ந்தவர்களும் சில தொழில்களைச் செய்பவர்களின் வாழ்க்கையும் காலம் காலமாக எந்தவொரு முன்னேற்றமும் அடையாமல் இருப்பதை நூலாசிரியர் நன்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments