முகப்பு
நூல் அரங்கம்

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்- சுமதிஸ்ரீ; பக்.96; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-02; )044-4263 4283.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:10 AM
பகிர்:

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்- சுமதிஸ்ரீ; பக்.96; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-02; )044-4263 4283.

சுமதிஸ்ரீ, சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி, திரைப்படப் பாடலாசிரியர். சிறு வயது முதல் தான் அனுபவித்த, கேட்ட, ரசித்த, பல்வேறு விஷயங்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். வாழ்வின் உயர்வுக்கு எவை வேண்டும் என்பதை தனது அனுபவத்தின் வாயிலாக அழகிய நடையில் வாரி வழங்கியுள்ளார்.

"பட்டுக்குட்டியின் பட்டுப் பாவாடை' தொடங்கி "அறுந்த செருப்பும், இறந்த மனிதனும்' என்னும் 13 தலைப்பில் அவரது அனுபவப் பாடங்கள் விரிகின்றன.

Advertisement

"திருடாமலேயே திகார் ஜெயிலுக்குப் போன மாதிரி இருந்தது...', "காதுகள் கதவின்றி படைக்கப்பட்டிருந்தாலும்..', "காயசண்டிகை கண்ணப்பா ஹோட்டலுக்குள் நுழைந்தது போல்..', "மேனி மயக்கமும், பொழுதொரு வண்ணம் வாந்தியுமாக நாட்கள் கழிந்தன...' போன்றவை எதார்த்த வரிகள்.

"உண்மையில் குழந்தைகள் நம்மை பிரசவிக்கிறார்கள். குழந்தை பிறந்தால்தான் அவள் தாய். இல்லையென்றால் அவள் வெறும் பெண்தான். குழந்தை பிறந்தால்தான் தகப்பன். இல்லையென்றால் அவன் வெறும் ஆண்தான். அதனால்தான் குழந்தைகளைக் கொஞ்சும்போது "என்னைப் பெத்தவளே எனக் கொஞ்சுகிறோம்'

இப்படி கருத்துப் பெட்டகமாக வலம் வரும் சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments