முகப்பு
நூல் அரங்கம்

எல்லாமே அரசியல்

இந்த நூலில் மிகக் கூர்மையான விமர்சனங்களை அங்கதம் மூலமாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

எல்லாமே அரசியல் - துக்ளக் சத்யா; பக்.288; ரூ.320; சுவாசம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-127; ✆81480 66645.

தீவிரமான அரசியல் கட்டுரைகள் எழுதுவது ஒரு வகை; அங்கதம் கலந்து எழுதுவது மற்றொரு வகை. இந்த நூலில் மிகக் கூர்மையான விமர்சனங்களை அங்கதம் மூலமாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர்.

2019 முதல் 2021 வரையிலான காலச் சூழ்நிலைகளின் பின்னணியில் எழுதப்பட்ட 57 கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல் கட்டுரைகள் மட்டுமின்றி, பிற கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பான கட்டுரையில், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீட்டிலும், பொருளாதார அளவுகோலை (கிரீமிலேயர்) நிர்ணயிக்காமல் பார்த்துக் கொண்டு வசதியானவர்களைப் பாதுகாப்பது சமூகநீதிக் கொள்கையை வாழ வைக்கும் செயலா? என நூலாசிரியர் எழுப்பும் கேள்விக்கு சமூக நீதி பேசும் தலைவர்கள் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அமைச்சர்களுடன் பேசுவது போன்ற கற்பனை கட்டுரைகள் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கின்றன.

ஒருநாடு- ஒரு தேர்தல், நீட் தேர்வு, சென்னை மழை வெள்ளம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து நகைச்சுவை குறித்து நூலாசிரியர் எழுதியுள்ள கட்டுரைகள் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.

அரசியல் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

எல்லாமே அரசியல் - துக்ளக் சத்யா; பக்.288; ரூ.320; சுவாசம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-127; ✆81480 66645.

தீவிரமான அரசியல் கட்டுரைகள் எழுதுவது ஒரு வகை; அங்கதம் கலந்து எழுதுவது மற்றொரு வகை. இந்த நூலில் மிகக் கூர்மையான விமர்சனங்களை அங்கதம் மூலமாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர்.

2019 முதல் 2021 வரையிலான காலச் சூழ்நிலைகளின் பின்னணியில் எழுதப்பட்ட 57 கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல் கட்டுரைகள் மட்டுமின்றி, பிற கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பான கட்டுரையில், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீட்டிலும், பொருளாதார அளவுகோலை (கிரீமிலேயர்) நிர்ணயிக்காமல் பார்த்துக் கொண்டு வசதியானவர்களைப் பாதுகாப்பது சமூகநீதிக் கொள்கையை வாழ வைக்கும் செயலா? என நூலாசிரியர் எழுப்பும் கேள்விக்கு சமூக நீதி பேசும் தலைவர்கள் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அமைச்சர்களுடன் பேசுவது போன்ற கற்பனை கட்டுரைகள் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கின்றன.

ஒருநாடு- ஒரு தேர்தல், நீட் தேர்வு, சென்னை மழை வெள்ளம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து நகைச்சுவை குறித்து நூலாசிரியர் எழுதியுள்ள கட்டுரைகள் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.

அரசியல் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →