முகப்பு
நூல் அரங்கம்

'நலமொடு உயிர் வாழ...'

ஆயுள்காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

'நலமொடு உயிர் வாழ...' - மருத்துவர் சோ.தில்லைவாணன், பக்கம் - 125; ரூ. 200; எமரால்டு பதிப்பகம், எழும்பூர், சென்னை - 600008; ✆98406 96574.

நலமொடு உயிர் வாழ சித்த மருத்துவ மூலிகைகளைக் கொண்டு வழிகாட்டியுள்ளார் நூலாசிரியர் மருத்துவர் சோ.தில்லைவாணன்.

இதயத்தின் நலம் காக்க திராட்சை உதவும் என்றும், அதில் உள்ள 'ரெஸ்வெரட்ரால்' உலக அளவில் அதிக பயன்பாட்டில் உள்ளது என்றும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோரியாசிஸ் தோல் நோய்க்கு கற்றாழை மூலிகை பெரும்பயன் அளிக்கும் என்று அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்நூல்.

அத்துடன் சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து சிறுநீரகத்தைக் காத்துக்கொள்ள கருஞ்சீரகமும், கால் எரிச்சலைப் போக்க லவங்கமும் பயன்படும் என்று விளக்குகிறது. கண்களுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி கல்லீரலையும் காக்கும் என்பது பலருக்கு புதிய தகவல். தூக்கமின்மைக்கு பிரமி கீரையும், ஆசன வாயில் ஏற்படும் பவுத்திரத்திற்கு குப்பைமேனியும் பயன்படும் என்று எளிய மூலிகைகளைக் கொண்டு நோய் தீர வழிகாட்டுகிறது.

மூட்டுக்களை வாட்டும் வாத நோய்களுக்கு சிற்றாமுட்டி உதவும் என்றும், வைட்டமின் டி குறைபாட்டுக்கு சுண்டைக்காய் போதும் என்றும், சிறந்த மூலிகை கார்டியோலஜிஸ்ட் மருதம்பட்டை என்றும் பாரம்பரிய மூலிகைகளைப் பட்டியலிட்டு மருத்துவ நலனுக்கு பாதை அமைக்கிறது. ஆயுள்காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.

'நலமொடு உயிர் வாழ...' - மருத்துவர் சோ.தில்லைவாணன், பக்கம் - 125; ரூ. 200; எமரால்டு பதிப்பகம், எழும்பூர், சென்னை - 600008; ✆98406 96574.

நலமொடு உயிர் வாழ சித்த மருத்துவ மூலிகைகளைக் கொண்டு வழிகாட்டியுள்ளார் நூலாசிரியர் மருத்துவர் சோ.தில்லைவாணன்.

இதயத்தின் நலம் காக்க திராட்சை உதவும் என்றும், அதில் உள்ள 'ரெஸ்வெரட்ரால்' உலக அளவில் அதிக பயன்பாட்டில் உள்ளது என்றும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோரியாசிஸ் தோல் நோய்க்கு கற்றாழை மூலிகை பெரும்பயன் அளிக்கும் என்று அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்நூல்.

அத்துடன் சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து சிறுநீரகத்தைக் காத்துக்கொள்ள கருஞ்சீரகமும், கால் எரிச்சலைப் போக்க லவங்கமும் பயன்படும் என்று விளக்குகிறது. கண்களுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி கல்லீரலையும் காக்கும் என்பது பலருக்கு புதிய தகவல். தூக்கமின்மைக்கு பிரமி கீரையும், ஆசன வாயில் ஏற்படும் பவுத்திரத்திற்கு குப்பைமேனியும் பயன்படும் என்று எளிய மூலிகைகளைக் கொண்டு நோய் தீர வழிகாட்டுகிறது.

மூட்டுக்களை வாட்டும் வாத நோய்களுக்கு சிற்றாமுட்டி உதவும் என்றும், வைட்டமின் டி குறைபாட்டுக்கு சுண்டைக்காய் போதும் என்றும், சிறந்த மூலிகை கார்டியோலஜிஸ்ட் மருதம்பட்டை என்றும் பாரம்பரிய மூலிகைகளைப் பட்டியலிட்டு மருத்துவ நலனுக்கு பாதை அமைக்கிறது. ஆயுள்காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →