முகப்பு
நூல் அரங்கம்

அறுபடை வீடு தந்த திருமுருகாற்றுப் படை

இப்புத்தகத்தில் அறுபடை வீட்டை யோகமார்க்கத்தில் காணச்செய்கிறார் ஆசிரியர்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

அறுபடை வீடு தந்த திருமுருகாற்றுப் படை - கே.பி. அறிவானந்தம்; பக்.113; ரூ.150; சத்யா எண்டர்பிரைசஸ் - சென்னை 94: ✆ 044 - 4507 4203.

மலையின் தெய்வம் முருகன். மலையில் தோன்றியதால் அவன் சிறு தெய்வமல்ல. அவன் பேருருவைச் சொல்லி இப்பிரபஞ்சத்தின் தெய்வம் என முருகனின் பெருமையைக் கூறி தொடங்குகிறது இந்நூல்.

இந்நூலானது, கந்தபுராணம் மற்றும் திருப்புகழ் காட்டும் முருகனை நமக்கு ஆதிமுருகனாக திருமுருகாற்றுப்படை காட்டுவதாக ஆய்வு செய்கிறது. குறிப்பாக திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) என்றாலே அது சூர சம்ஹாரம்தான். ஆனால் சம்ஹாரம் பற்றி கூறாமல், முருகனின் ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களைப் பற்றி திருமுருகாற்றுப்படை கூறுவதாக இந்நூல் ஆய்வு செய்து தருவது குறிப்பிடத் தகுந்தது.

திருமுருகாற்றுப்படையின் தொன்மை பற்றியும், அது தோன்றிய காரணம், அதிலுள்ள பாடல்களைப் பற்றிக் குறிப்பிடுகிற நூலாசிரியர், பாடல்களைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கியுள்ளார். இப்புத்தகத்தில் அறுபடை வீடுகளின் பாடல்கள் விளக்கப்பட்டு பின்னர் அவற்றைக் குறித்த வரலாறு கூறப்படுகிறது.

திருவாவினங்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என அவை தொடர்பாக ஏற்கெனவே நாம் அறிந்தவற்றை திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் நமக்கு வேறொரு கோணத்தில் காண்பித்திருப்பதை இந்நூல் நமக்கு வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.

இறுதியாக இப்புத்தகத்தில் அறுபடை வீட்டை யோகமார்க்கத்தில் காணச்செய்கிறார் ஆசிரியர்.

அறுபடை வீடு தந்த திருமுருகாற்றுப் படை - கே.பி. அறிவானந்தம்; பக்.113; ரூ.150; சத்யா எண்டர்பிரைசஸ் - சென்னை 94: ✆ 044 - 4507 4203.

மலையின் தெய்வம் முருகன். மலையில் தோன்றியதால் அவன் சிறு தெய்வமல்ல. அவன் பேருருவைச் சொல்லி இப்பிரபஞ்சத்தின் தெய்வம் என முருகனின் பெருமையைக் கூறி தொடங்குகிறது இந்நூல்.

இந்நூலானது, கந்தபுராணம் மற்றும் திருப்புகழ் காட்டும் முருகனை நமக்கு ஆதிமுருகனாக திருமுருகாற்றுப்படை காட்டுவதாக ஆய்வு செய்கிறது. குறிப்பாக திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) என்றாலே அது சூர சம்ஹாரம்தான். ஆனால் சம்ஹாரம் பற்றி கூறாமல், முருகனின் ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களைப் பற்றி திருமுருகாற்றுப்படை கூறுவதாக இந்நூல் ஆய்வு செய்து தருவது குறிப்பிடத் தகுந்தது.

திருமுருகாற்றுப்படையின் தொன்மை பற்றியும், அது தோன்றிய காரணம், அதிலுள்ள பாடல்களைப் பற்றிக் குறிப்பிடுகிற நூலாசிரியர், பாடல்களைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கியுள்ளார். இப்புத்தகத்தில் அறுபடை வீடுகளின் பாடல்கள் விளக்கப்பட்டு பின்னர் அவற்றைக் குறித்த வரலாறு கூறப்படுகிறது.

திருவாவினங்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என அவை தொடர்பாக ஏற்கெனவே நாம் அறிந்தவற்றை திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் நமக்கு வேறொரு கோணத்தில் காண்பித்திருப்பதை இந்நூல் நமக்கு வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.

இறுதியாக இப்புத்தகத்தில் அறுபடை வீட்டை யோகமார்க்கத்தில் காணச்செய்கிறார் ஆசிரியர்.

முழு கட்டுரையைப் படிக்க →