சூரியப்பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா
திருமலை-திருப்பதி நவராத்திரி பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சூரியப்பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் உலா வந்தார்.
திருமலை-திருப்பதி நவராத்திரி பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சூரியப்பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் உலா வந்தார்.
திருமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சூரியப்பிரபையில் உலா வந்த மலையப்ப சுவாமியை தரிசித்தனர். இரவு சந்திரப்பிரபை வாகனத்தில் உலா வந்தார். சனிக்கிழமை இரவு யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.