ஜூலை 19-ல் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தொடக்கம்
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா ஜூலை 19-ம் தேதி தொடங்கி வரும் ஆக.16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:23 AM
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா ஜூலை 19-ம் தேதி தொடங்கி வரும் ஆக.16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் செண்பகநல்லூர் என்று அழைக்கப்பட்ட குச்சனூர் சுரபி நதிக் கரையில், சனீஸ்வர பகவான் சுயம்புவாய் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார். இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம்தோறும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு ஜூலை 16-ம் தேதி(சனிக்கிழமை) தொடங்கி, வரும் ஆக.16-ம் தேதி(சனிக்கிழமை) வரை ஆடிப் பெருந்திருவிழா நடைபெறுகிறது.
Advertisement