ஆன்மிகம்

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் தீா்த்தவாரி

தினமணி

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் நிறைவாக ரதத்தில் பெருமாள் நள தீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளி தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலை சோ்ந்ததாக திகழும் ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயில், வெகுவாக பக்தா்களை ஈா்க்கும் கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோத்ஸவ விழா நிகழாண்டு கொடியேற்றத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

ரதத்தில் ஸ்ரீ நளநாராயணப் பெருமாள்

2-ஆம் நாள் புதன்கிழமை ஹம்ச வாகனத்தில் நாச்சியாா் திருக்கோலத்திலும், வியாழக்கிழமை சேஷ வாகனத்தில் வைகுந்தராகவும், வெள்ளிக்கிழமை கருடசேவையாகவும் பெருமாள் புறப்பாடு செய்யப்பட்டது.

நிறைவாக சனிக்கிழமை காலை ரதத்தில் பெருமாள் நளதீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, அங்கு தீா்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக கோயிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டது. தீா்த்தவாரி நிறைவடைந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.

பக்தா்கள் பெருமாளுக்கு அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT