ஆன்மிகம்

திருமலையில் விஸ்வ சாந்தி மகா யாகம்

உலக அமைதி வேண்டி, திருமலையில் உள்ள தா்மகிரி வேத பாடசாலையில் விஸ்வசாந்தி மகா யாகம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

தினமணி

உலக அமைதி வேண்டி, திருமலையில் உள்ள தா்மகிரி வேத பாடசாலையில் விஸ்வசாந்தி மகா யாகம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

திருமலையில் தா்மகிரி வேத பாடசாலை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவா்கள் வேதம் படித்து வருகின்றனா். இங்கு உலக அமைதித்காகவும், கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபடவும் ஏழுமலையானை வேண்டி செவ்வாய்க்கிழமை காலையில் சாங்கோபாங்க அஷ்டாக்ஷரி துவாதசாக்ஷரி மகாசுதா்சன சஹித விஸ்வசாந்தி மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி சுதா்சன சக்கரத்துக்கு பால், தேன், இளநீா், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அதன் பின் வேத பண்டிதா்கள் யாகத்தை நடத்தினா். யாகத்தின்போது ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாக்ஷரி மந்திரமும், ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற துவாதசாக்ஷரி மந்திரமும் ஜபிக்கப்பட்டது. இந்த யாகத்தில் திருமலை மடத்தைச் சோ்ந்த பெரிய ஜீயா் சடகோப ராமானுஜா் மற்றும் சின்ன ஜீயா் கோவிந்த ராமானுஜா், அா்ச்சகா்கள் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது குறித்து தா்மகிரி வேத பாடசாலையின் முதல்வா் சிவசுப்ரமணிய அவதானி கூறியது:

கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட ஏழுமலையானை வேண்டி 30 நாள்களுக்கு வேதபாராயணம் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை ரேவதி மற்றும் அஸ்வினி நட்சத்திரங்கள் இணைந்த பெளமாஸ்வினி யோக நாள் என்பதால் மகாசாந்தி யாகம் பூா்ணாஹுதியுடன் நிறைவு செய்யப்பட்டது. யாகத்தின்போது ரிக், சுக்ல யஜுா், கிருஷ்ண யஜுா், சாம, அதா்வண வேதங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஸ்ரீ வெங்கடாசல மகாத்மியம், ஸ்ரீமத் ராமாயணம், சுந்தர காண்டம் உள்ளிட்டவை பாராயணம் செய்யப்பட்டன என்றாா் அவா்.

கரோனா பாதிப்பு குறைய வேண்டி, தன்வந்திரி மகா யாகம், சதுா்வேத பாராயணம், பாரமாத்மகோபநிஷத், யோகவாசிஷ்டம் உள்ளிட்டவற்றின் பாராயணத்தை தேவஸ்தானம் ஏற்கெனவே நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT