முகப்பு
ஆன்மிகம்

திருமலையில் 13,486 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 13,486 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 4,783 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 7 செப்டம்பர், 2020 at 7:50 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:46 PM

திருப்பதி ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 13,486 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 4,783 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். தரிசன அனுமதி அளிக்கப்பட்ட நாளான ஜூன் 11-ஆம் தேதிக்குப் பின் அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் சனிக்கிழமைதான் ஏழுமலையானை வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலம் 10 ஆயிரம் மற்றும் சா்வதரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனா்.

Advertisement

திருப்பதி மலைச்சாலை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. செப்டம்பா் மாதம் முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தினசரி 100 எண்ணிக்கையில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் -

18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.