முகப்பு
செய்திகள்

சபரிமலையில் மண்டல பூஜை துவக்கம்

சபரிமலைக் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை முதல் பூஜைகள் தொடங்கின. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
சபரிமலைக் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை மண்டல கால நெய் அபிஷேகத்தை தொடக்கி வைத்த புதிய மேல்சாந்தி கே.வி.உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி.
பகிர்:

சபரிமலைக் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை முதல் பூஜைகள் தொடங்கின. 
சபரிமலையில் மண்டல பூஜை தொடங்குவதை முன்னிட்டு, புதன்கிழமை மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக சபரிமலையில் தங்கி பூஜைகள் நடத்தி வந்த மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியின் பதவி நிறைவு பெறுவதையொட்டி, அவர் வியாழக்கிழமை கோயில் நடையை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர், கணபதி கோயிலில் விளக்கேற்றிவிட்டு 18 -ஆம் படி வழியாக இறங்கிச் சென்று ஆழி குண்டத்தில் அக்னி வளர்த்தார்.
அதைத்தொடர்ந்து, புதிய மேல்சாந்திகளான சபரிமலை கே.வி. உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, மளிகைப்புரம் அனிஷ் நம்பூதிரி ஆகியோருக்கு மாலை அணிவித்து, 18 -ஆம் படி வழியாக அழைத்துச் சென்றார். ஸ்ரீகோயில் முன்பாக அவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு, சபரிமலை புதிய மேல்சாந்தியான கே.வி. உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, ஸ்ரீகோயில் முன்புறம் தரையில் அமர்த்தப்பட்டார். அவருக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தி, ஒரு குடம் நீரால் அபிஷேகம் நடத்தினார். பின்னர், அவரது காதில் ஐயப்பன் மூல மந்திரத்தை உச்சரித்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இதேபோன்று, அனிஷ் நம்பூதிரிக்கும் மாளிகைப்புறம் கோயில் முன்புறம் நடைபெற்ற சடங்கில், தந்திரி அபிஷேகம் நடத்தி, தேவி மந்திரம் உச்சரித்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
அதன் பின்னர், மண்டல கால நெய் அபிஷேகத்தை தந்திரி தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கணபதி ஹோமம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →