செய்திகள்

அற்பாயுள் உள்ளவர்களின் கிரகநிலை எப்படி இருக்கும்? 

தினமணி

எடுக்குடையவன் பாபருடன் கூடி, எட்டிலோ, பன்னிரண்டிலோ ஆறிலோ இருந்தால் அற்ப ஆயுள் உண்டாகிறது. 

பாபர்கள் 3, 6, 9, 12-ம் இடத்தில் இருந்தாலும் அற்பாயுளேயாகும். 2-க்குடையவன் ஒன்பதாமிடத்திலும் சனி ஏழிலும் பதினொன்றில் குரு, சுக்கிரன் இருந்தாலும் அற்பாயுளாகும். 

லக்னத்தில் சனி செவ்வாய் இவர்களும், எட்டில் சந்திரனும் 6-ல் குருவும் இருந்தால் அற்பாயுளாகும். லக்னாதி எட்டாமிடத்தில் இருந்தால் அற்பாயுள். 6,8,12-ம் இடத்தில் பாபவரும், லக்னாதிபதி பலமற்று இருந்தால் அற்பாயுளாகும். 

சனி, எட்டுக்குடையவன் இவர்கள் குரூர சஷ்டியம்சத்திலிருந்து பாபருடன் கூடியோ பாபரால் பார்க்கப்பட்டோ இருந்தாலும் அற்பாயுள். பாபர் கேந்திரத்திலிருந்து சுபர் பார்வையைப் பெறாமலும், லக்னாதிபதி பலமற்று இருந்தாலும், இரண்டு பாபர்கள் 12, 2-ம் இடத்தில் இருந்து சுபர் பார்வைப் பெறாமல் இருந்தாலும் அற்பாயுளாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT