செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை சொற்பொழிவு தொடக்கம்

DIN

மார்கழி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. புலவர் சீனுவாசவரதன் தலைமையிலானோர் தினமும் திருவெம்பாவை சொற்பொழிவாற்றுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மார்கழி மாதப் பிறப்பையொட்டி, வெள்ளிக் கவச அலங்காரத்தில் உத்ஸவர் ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீபராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT