செய்திகள்

8-ம் பாவத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன்?

தினமணி

எந்தக் கிரகமும், இருக்கும் நட்சத்திரத்தின் தன்மை, குணம் இருக்கும் ஸ்தானபலம், தாராபலம் ஆதிபத்ய பலம் இவற்றை பொறுத்தே பலன் தரும் என்பது முக்கிய விதியாகும். கீழே காணும் பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. 

சூரியன்

8-ம் பாவத்தில் சூரியன் இருந்து அந்த இடம் மேஷம், சிம்மமாக அமைந்தால் நீண்ட ஆயுளையும், சிறந்த பேச்சாற்றலையும் தரும். இந்த பாவத்தில் உள்ள சூரியன் 6, 8, 11-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெற்றால் போட்டி, பந்தயங்களில் வெற்றியும், சூதாட்டத்தில் ரேஸ், பரிசுச்சீட்டில் எதிர்பாராத லாபமும் தரும் அமைப்பாகும். 

சந்திரன்

8-ம் பாவத்தில் சந்திரன் பலமற்று இருப்பது மூளைக் கோளாறு, சஞ்சலமுடைய குணம், இவற்றைத் தரும். உடல் நலமும் பாதிக்கப்படும். இளமையில் தாயைவிட்டு பிரியவோ அல்லது இழக்கவோ நேரிடலாம். பாவிகளின் சம்பந்தம் இங்குள்ள சந்திரனுக்கு ஏற்பட்டால், கண்நோய் எப்பொழுதும் நோயால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். சுபரின் பார்வை, சம்பந்தம் ஏற்பட்டால் நன்மையான பலன்களைத் தரும். பூரண சந்திரன் அல்லது ஆட்சி உச்சம் பெற்ற சந்திரனாக இந்த பாவத்தில் அமைந்தால் தொழில் மேன்மைதரும் 8-ம் பாவம் என்பது 10-ம் பாவத்திற்கு லாப ஸ்தானமாகிய 11-ம் பாவமாக அமைவதால்)

செவ்வாய்

செவ்வாய் 8-ம் பாவத்தில் இருப்பது பொதுவாக நலம் தராது. பாவிகளின் சம்பந்தம் பெற்று, 7-ம் அதிபதியின் சம்பந்தமும் ஏற்பட்டால் திருமணமானவுடன் கணவரை இழக்கும் நிலையோ, பிரிந்து வாழும் நிலையோ ஏற்படலாம். பின் தான் விரும்பியவருடன் சேர்ந்து வாழும் யோகத்தையும் தரும். சொந்தம் என்னும் உறவும் கூட பாதிக்கப்படும். இரத்த சம்பந்தமான நோயால் அவதிப்பட நேரிடலாம். நிம்மதியில்லாத மணவாழ்க்கையும் அமையலாம். சுபரின் சம்பந்தம் ஏற்படுமானால் தீயபலன்கள் குறைந்து காணப்படும். 

புதன்

8-ம் பாவத்தில் புதன் இருப்பது நல்ல பலன் தரும் என்பது பல ஜோதிட அறிஞர்களின் கருத்தாகும். செல்வமும், புகழும் தரும் அமைப்பாகும். மேலும் சிறந்த கல்வியைத் தரும். நீண்ட ஆயுளையும் தரும். ஆனால் உடல் எப்பொழுதும் மெலிந்த நிலையிலேயே இருப்பார்கள். மேலும் சூரியனுடன் 10 டிகிரிக்கு மேல் இணைந்து புதன்-மிதுனம், கன்னியில் இருந்து அது 8-ம் பாவமாக அமைந்தால் புத ஆதித்ய யோகம் பெற்று, சிறந்த கல்விமானாக, தான்கற்ற கல்வியாலே செல்வமும், புகழும் பெறும் அமைப்பாகும். ஆனால் சூரியன் புதன் 10 டிகிரிக்குள் அமைந்தால் சிறந்த கல்வியைத் தராது. சூரியனுக்கு முன் புதன் 10 டிகிரிக்குள் அமைவது யோகத்தை தராது. ஆரம்ப கல்வியைக் கூட தராத நிலையாகும். 

குரு

குரு பகவான் 8-ம் பாவத்தில் இருந்தால் தயாள குணம் பெற்றிருப்பார்கள். நீண்ட ஆயுளைத் தரும். குரு உச்சமோ, ஆட்சிபெறும் நிலை ஏற்பட்டால் அங்கிருந்து 12, 2-4ம் பாவங்களைப் பார்க்கும் நிலை ஏற்படுவதால் சயன சுகத்தையும், நிம்மதியான தூக்கத்தையும், நல்ல குடும்பத்தையும், உலகியல் சுகங்களையும் தரும் நிலையாகும். இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிப்பதே அதிர்ஷ்டமாகும்.

சுக்கிரன்

8-ம் பாவத்தில் சுக்கிரன் இருப்பது செல்வம், புகழ், அதிகாரம் செய்யும் தகுதி இவற்றையும் தரும். பலம் பெற்று அமைந்தால் இவ்வுலகில் அனுபவிக்கும் அனைத்து சுகத்தையும் அனுபவிக்கும் யோகத்தையும் தரும். பாவிகளின் சம்பந்தம் பெற்றிருந்தாலும் மற்றவரின் கீழ் பணியாற்றும் நிலையைத் தரும். இன்ப-துன்பம் இரண்டையும் அனுபவிக்கும் நிலையாகும். 

சனி

சனீஸ்வர பகவான் 8-ம் பாவத்தில் இருப்பது நீண்ட ஆயுளைத் தரும். பல பொறுப்புக்களையும் தரும். குழந்தை செல்வம் குறைவாகவே அமையும். பல பெண் நண்பர்கள் அமைவார்கள். நுரையீரல் நோயினால் அதிகம் பாதிப்பு ஏற்படும். பெற்றெடுத்த பிள்ளைகளால் துன்பமும் நேரும். பாவிகளுடன் இணைந்ததோ, பார்க்கப்படும் நிலையில் இருந்தால் ஜெனன உறுப்புகள் பாதிக்கப்படும். நம்பத்தகாதவராகவும் இருப்பார்கள். பலம் பெற்று சனி இந்த பாவத்தில் இருப்பது எண்ணெய் சம்பந்தமான தொழில், இரும்புப் பொருள், பழைய துணி, காகிதம், சுரங்கப் பொருள், வியாபாரம், பெட்ரோல் பங்க் அமைந்தால் லாபம் பெருகும். 

ராகு

8-ம் பாவத்தில் ராகு அமைவது சிறந்த அமைப்பில்லை. எப்பொழுதும் சண்டைப் பிரியராகவோ, கோள் மூட்டுபவராகவோ இருப்பார்கள். தொல்லைகள், துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலையாகும். 8-ம் பாவம் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், மகரமாக அமைந்தால் பாதிப்புகள் குறைவாகும். பாவிகளின் சம்பந்தம் மேலும் பாதிப்பைத் தரும். சந்திரன் பலமற்று, ராகுவுடன் 10 டிகிரிக்குள் இணைந்திருந்தால் மனம் பேதலிக்கும். மூளைக்கோளாறு ஏற்படும் மனம் பேதலிக்கும். மூளைக்கோளாறு ஏற்படும். ராகு 12-யிலும் அமையுமானால் மஹா சக்தியோகத்தை தந்து பராசக்தியின் அருளைப் பெறும் யோக சாலியாகவும் ஆவார்கள். ஆன்மீகத் துறையில் அதிக ஈடுபாட்டையும், காம யோகியாகவும் இருப்பார்கள். 

கேது

கேது 8-ம் பாவத்தில் இருந்து சுபருடன் சம்பந்தம் ஏற்பட்டால் நீண்ட ஆயுளையும், செல்வத்தையும் தரும். ஆன்மீக ஈடுபாட்டை அதிகம் தரும். பாவிகளுடன் சம்பந்தப்பட்டால் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு, அவர்களின் சொத்தை அனுபவித்து அதனால் உடல் நலம் கெட்டு, பல தொல்லைகளை அனுபவிக்கும் நிலை ஏற்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT