செய்திகள்

திருச்சி மலைக்கோட்டை மலை உச்சியில் கொப்பரை அமைக்கும் பணி தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி..

DIN

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மலை உச்சியில் கொப்பரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 

நவம்பர் 23-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தென்கயிலாயம் என்றழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தீப திருவிழா மலையில் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு கொப்பரை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 

இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 11-ம் தேதி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொப்பரையில் திரி வைப்பதற்கும், எண்ணெய் ஊற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திரியை கொப்பரையில் வைக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. எண்ணெய் முழுவதுவாக ஊற்றப்பட்ட பின் திரி அதில் நன்கு ஊறியதும், நவ.23-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா அன்று மாலை 6 மணிக்கு கொப்பரையில் தீபம் ஏற்றப்படம். இந்த தீபம் அணையாமல் தொடர்ந்து மூன்று நாட்கள் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை உள்பட 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை!

வாசிம் ஜாஃபர் - மைக்கேல் வாகன் மோதல்! கிரிக்கெட் சண்டையையும் டிரம்ப் நிறுத்தினாரா?

ஐசிசி தரவரிசை: இதுவரை இல்லாத உச்சத்துக்கு முன்னேறிய சிராஜ்!

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்வரை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!

எஸ்டிஆர் - ராம்குமார் கூட்டணி... இருக்கு, ஆனா இல்லை!

SCROLL FOR NEXT