செய்திகள்

திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

தினமணி

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

நவம்பர் 24-ம் தேதி வரை பத்து நாட்கள் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. அதன் பின் கோயில் கொடி மரத்திற்குத் தீபாராதனை காட்டப்பட்டுக் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

விழாவின் சிகர விழாவாக 22-ம் தேதி பட்டாபிஷேகமும், 23-ம் தேதி காலை தேரோட்டமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 24-ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT