செய்திகள்

அவிநாசியில் வினோத திருவிழா: உடலில் சேறு பூசி ஆண் பக்தர்கள் வழிபாடு

DIN

அவிநாசி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடாக உடல் முழுவதும் சேறு பூசி அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். 

அவிநாசியை அடுத்துள்ள அத்தனூர் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 13-ம் தேதி பூச்சாட்டுடன் திருக்கல்யாண உற்சவ விழா தொடங்கியுது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு முளைப்பாலிகை, மாவிளக்கு ஆகியன எடுத்தும், பொங்கல் வைத்தும் பெண்கள் வழிபாடு செய்தனர். 

உலக நலன் வேண்டியும், மழை வளம் பெருகவும் ஆண் பக்தர்கள் ஒருவருக்கொருவர் உடலில் சேறு பூசிக்கொண்டு அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீட்டுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT