செய்திகள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று கிருஷ்ணதீர்த்த தெப்பல் உற்சவம்

பங்குனித் திருவிழாவையொட்டி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்  கிருஷ்ணதீர்த்த தெப்பல் உற்சவம் இன்று நடைபெறுகிறது.

DIN

பங்குனித் திருவிழாவையொட்டி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்  கிருஷ்ணதீர்த்த தெப்பல் உற்சவம் இன்று நடைபெறுகிறது.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா, கடந்த மார்ச் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 11-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

விடையாற்றி விழாவின் நிறைவு நாளான இன்று (ஏப்ரல் 23) கோயிலின் வலதுபுறம் உள்ள கிருஷ்ணதீர்த்த தெப்பக் குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி, குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் இரவு 8.30 மணிக்கு சத்யபாமா, ருக்மணி சமேதராக உற்சவர் ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மூன்றுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT