செய்திகள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று கிருஷ்ணதீர்த்த தெப்பல் உற்சவம்

DIN

பங்குனித் திருவிழாவையொட்டி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்  கிருஷ்ணதீர்த்த தெப்பல் உற்சவம் இன்று நடைபெறுகிறது.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா, கடந்த மார்ச் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 11-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

விடையாற்றி விழாவின் நிறைவு நாளான இன்று (ஏப்ரல் 23) கோயிலின் வலதுபுறம் உள்ள கிருஷ்ணதீர்த்த தெப்பக் குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி, குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் இரவு 8.30 மணிக்கு சத்யபாமா, ருக்மணி சமேதராக உற்சவர் ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மூன்றுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT