செய்திகள்

கூத்தாநல்லூர் வடுவழகி அம்மன் கோயில் தேரோட்டம்

தினமணி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வடுவழகி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை  நடைபெற்றது. 
கூத்தாநல்லூர் மரக்கடை தெற்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவடுவழகி அம்மன் கோயிலில் 95-ஆம் ஆண்டு உத்ஸவம் நடைபெற்றது. மரக்கடை  கிராமமக்கள் ஏற்பாட்டின்படி, செவ்வாய்க்கிழமை கஞ்சி வார்த்தல் நடத்தப்பட்டன. தொடர்ந்து புதன்கிழமை  காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வடுவழகி அம்மன் காட்சியளித்தார். தொடர்ந்து, தப்பாட்ட நிகழ்ச்சியுடன் தேரோட்டம் நடைபெற்றது. தேர் மரக்கடை, திருவாரூர் - மன்னார்குடி பிரதான வடக்குத் தெரு, தெற்குத் தெரு உள்ளிட்ட சாலைகள் வழியாக வீதியுலா வந்தது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் வடுவழகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT