செய்திகள்

ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது அத்திவரதர் தரிசனம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான அவகாசம் வரும் 16-ம் தேதி இரவுடன்..

தினமணி

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான அவகாசம் வரும் 16-ம் தேதி இரவுடன் நிறைவு பெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அருள்பாலித்து வரும் அத்திவரதர் கடந்த 31 நாட்கள் சயன கோலத்திலும், 8 நாட்களாக நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார். விழாவின் 39-வது நாளான இன்று பச்சை பட்டு உடுத்தி, மலர் கிரீடத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். 

பெருமாளை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருவதால் மக்கள் வெள்ளத்தால் காஞ்சிபுரம் மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த 38 நாட்களில் சுமார் 70.25 லட்சம் பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளனர். அத்திவரதரை நேற்று மட்டும் சுமார் 3.70 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 16-ம் தேதி இரவுடன் நிறைவு பெறுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி விடியற்காலையுடன் தரிசனம் நிறைவு பெறுகிறது. அதற்குப்பின் கிழக்கு கோபுரவாயில் மூடப்படும். கடைசி நாளான 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு சடங்குகள் நடைபெற உள்ளது. பின்னர், அத்திவரதரை அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்க உள்ளார். எனவே 16-ம் தேதி இரவுடன் தரிசனம் நிறைவு பெறுகிறது.

மேலும், சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 25 மினி பேருந்துக்கள் விடப்பட்டுள்ளது என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT