முகப்பு
செய்திகள்

ஆடி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்!

ஆடி மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:48 AM
பகிர்:

ஆடி மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிவனின் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பௌர்ணமி நாள்களில் வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். 

இந்த நிலையில், ஆடி மாதப் பௌர்ணமி புதன் கிழமை (ஆகஸ்ட் 14)  மாலை 4.32 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) மாலை 6.11 மணிக்கு முடிவடைகிறது. 

எனவே, பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.