செய்திகள்

46-வது நாளில் புஷ்பங்கி சேவையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்!

அத்திவரதர் பெருவிழாவின் 46-வது நாளான இன்று புஷ்பங்கி சேவையில் அதாவது மலர்..

தினமணி

அத்திவரதர் பெருவிழாவின் 46-வது நாளான இன்று புஷ்பங்கி சேவையில் அதாவது மலர் ஆடையில் பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் 15 நாட்களாக நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

அத்திவரதரை தரிசிக்க நாளையுடன் கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை கருடசேவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கவுள்ளது.

கருட சேவையை முன்னிட்டு கிழக்கு கோபுரவாசல் இன்று பகல் 12 மணிக்கு மூடப்பட்டது. 12 மணிக்கு முன்னர் கோயிலுக்குள் இருப்பவர்கள் 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம். மாலை 4 மணியிலிருந்து ஆடி கருட சேவை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

இன்று 12 மணியுடன் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 47-வது நாளான ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. 

ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரை திருக்கோயில் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆகம விதிகளின்படி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அன்று மாலை குளத்தில் வைக்கப்படுவார். 

அத்திவரதரை தரிசிப்பதற்கான காலநீட்டிப்பு எதுவும் கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருக்கோயில் மூலவரை வரும் 18-ம் தேதியிலிருந்து பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT