செய்திகள்

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

தினமணி


அத்திவரதர் வைபவத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்றுடன் 47 நாட்களாக அத்திவரதர் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அத்திவரத பெருமாளை காண நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 46 நாட்களில் சுமார் 1 கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்கக்கோரி தென்னிந்திய மஹா சபா சார்பில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மரபு, வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆகம விதிப்படி 48 நாட்களில் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்டுவது தான் மரபு என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT